Sunday, May 27, 2012

தி ஃபர்ஸ்ட் ஸ்ட்ரெஸ்


(இப்பதிவுக்கும் ஹுஸைனம்மாவின் டென்த் டென்ஷன் பதிவுக்கும் சம்பந்தமில்லை ஹி..ஹி... ;-)))
வாங்க..வாங்க... என்னை யாருன்னு தெரியுதா? நாந்தான் என்றென்றும்16 அப்டீன்ற பேர்ல ப்ளாக் நடத்திட்டிருக்கிற (?) பானு...அப்பப்ப இப்டி எனக்கு நானே இன்ட்ரொ கொடுக்கவேண்டியதாயிருக்கு...:(...


கிட்டத்தட்ட ஒரு மாத விடுமுறையில் ஊருக்கு போயிட்டு வந்து பார்த்தா நம்ம பெரியதுரைக்கு விடுபட்ட பாடங்கிறாங்க... வீட்டுப்பாடங்கிறாங்க... தினமொரு வகுப்புத்தேர்வுங்கிறாங்க... ப்ராஜக்ட்டுங்கிறாங்க... அஸ்ஸெஸ்மென்டுங்கிறாங்க.... முடீல... பெரியதுரைன்ன உடனே ரொம்ப பெரிய்ய்ய்யதுரைன்னு நினச்சிடாதீங்க..... ஜஸ்ட் ஒண்ணாங்கிளாஸ் தான்.... ஹ்..ம்... மண்டை காயுது... பெண்டு நிமிருது.... கண்ணு இருளுது...இப்டி எல்லா டயலாக்ஸுமே இப்ப என் நிலமைக்கு பொருந்துது... :-((...ஓ..கே...ஸ்டாப்பிங் தெ பொலம்பல்ஸ்.......


ஊர்ல இருக்கும்போது நம்ம அய்யாதுரைக்கு கண் செக் பண்ணிட்டு லென்ஸ் மாத்திட்டு அப்படியே ஃப்ரேமையும் மாத்தலான்னு ஒவ்வொரு ஃப்ரேமா போட்டு பாத்து இது நல்லாருக்கா...இது நல்லாருக்கான்னு கேட்டுக்கிட்டிருந்தார் (கடையில் செலக்ஷனுக்கு வச்சிருக்கிற ஃப்ரேம்களில் சாதா லென்ஸ்தான மாட்டியிருக்கும்)..... நானும் ரெண்டு மூணு தடவை பொறுமையா பார்த்து பதில் சொல்லிட்டுருந்தேன்.... அடுத்த ஃப்ரேமுக்கு "ஏங்க அதான் முகம் பார்க்கிற கண்ணாடி இருக்குல்ல...அதுல பார்த்து செலக்ட் பண்ணுங்களேன்... ஏன் என்னையே தொந்தரவு பண்றீங்க..."ன்னு ஒரு ரைடு விட்டேன்.... அவரும் பாவமா "எனக்குத் தெரியல.... எனக்குத் தெரிஞ்சா நான் ஏன் உன்னைக் கேட்கிறேன்"னு சொன்னார்.... நானும் ஒரு ஃப்ரேம் கூட செலக்ட் பண்ணத் தெரியல....என்னத்த குடும்பத்தலைவனோன்னு ஒரு பொலம்பல் (மனசுக்குள்ள தான்) .....

அடுத்த ஃப்ரேமுக்கும் அதே கேள்வி,  அதே பதில் ... ....."எனக்குத் தெரியல.... எனக்குத் தெரிஞ்சா நான் ஏன் உன்னைக் கேட்கிறேன்" ...அதே புலம்பல்...

அப்பத்தான், நம்ம அய்யாதுரை தூங்கி முழிக்கும்போதே கண்ணாடி எடுத்து மட்டிக்கிற வரை தட்டி துழாவி ஒரு குத்துமதிப்பா நடமாடுறது ஞாபகம் வந்துச்சு.... "ஏங்க நீங்க தெரியல தெரியல்ன்னு சொன்னது அந்தத் தெரியலயா"ன்னு கேட்டா அவரும் பாவமா "ஹ்..-ம்... உனக்கு அது இப்பத்தான் புரியுதா"ன்னு கேட்க, கடைக்காரன் சிரிப்ப அடக்க முடியாம வாயை மூடிக்கிட்டு சிரிக்க. .... ச்ச... நம்ம பொழப்பு இப்டி சிரிப்பா சிரிச்சு போச்சு போங்க...

விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்... அநேகமா இன்ட்ரொ தேவைப்படுற அளவுக்கு இடைவெளி வராதுன்னு சொல்லி விடைபெறுவது என்றென்றும்16 பானு. வஸ்ஸலாம். நன்றி.