Thursday, October 1, 2015

உண்மைப் படம்; குட்டிக் கற்பனைக்(?) கதை

அலுவலகம் வந்ததிலிலிருந்து பரபரப்பு அகிலாவிற்கு. பரபரப்பு என்பது அவளுக்குப் புதிதல்லதான். அன்று அகிலாவின் நிறுவனம், அந்த டெண்டரை ஏலத்தில்  எடுத்துவிட்டதில் வாழ்த்து மழை குவிந்துகொண்டிருந்தது, அகிலாவை மேலும் மேலும் பிசியாக்கியது. அவளுக்குப் புரியாமலில்லை.. இத்தனை வருடங்களில் இதே டிம்பர் துறையில் இளம் வயதிலேயே பழம் தின்று கொட்டை போட்டவளுக்கு, இதுவரை அவளுக்கு வந்த வாழ்த்துகளிலும் பூங்கொத்துகளிலும் எத்தனை உண்மை, எத்தனையெத்தனை வேஷம் என்பதை அவளது உதட்டுப் புன்னகையே அவளது செக்ரட்டரிக்கு விளக்கிக்காட்டியது. 

வாழ்த்துகள் வந்த வரிசையில் பத்தோடு பதினொன்றாக அந்த ஃபோன் காலும் வந்தது. 

“ஹலோ.. அகிலா ஹியர்”

“ஹலோ... அகிலா மேடம்... டெண்டர் கிடைத்ததில் மனமார்ந்த வாழ்த்துகள்”

“நன்றி... நீங்க... இந்த நம்பர் புதுசா இருக்கே”

“ஓ... என்னை உங்களுக்குத் தெரியாதுல்ல....”

வளவளவெனப் பேசுவது அகிலாவிற்கு சுத்தமாகப் பிடிக்காத ஒன்று. இந்த உரையாடலும் அந்த வகையறாவைச் சேர்ந்ததென தோன்றினாலும் தன்னை நன்கு தெரிந்த ஒருவர் என ஊர்ஜிதம் செய்தாள்.

பேசிக்கொண்டிருக்கும்போதே  தன் பெர்சனல் ஃபோனில் அவளது மகள் அனுப்பிய படம் அவளை அழைத்தது. சஞ்சனா, Mr.Bean போல் வேடமிட்ட ஒருவருடன் எடுத்த ஃபோட்டோ. “Haaaai.. mooooom.....It's cool naa?" என்று குதூகலமாக அனுப்பியதை ரசித்தவளிடம்,



”பட் எனக்கு உங்களை, உங்க மகளை.... ம்ம்ம் சஞ்சனா.. நைஸ் கேர்ள். Mr.Bean என்றால் ரொம்பப்பிடிக்குமோ.. எனிஹவ்.. அவளுடைய சமத்துவம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு”

தன் மகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பவன் இவனா? அதிர்ச்சி ஒரு நொடியில் உடல் முழுக்க வியர்க்க் வைத்தது; நாடித்துடிப்பை எகிற வைத்தது.

“ஹேய்.... ஹேய்... யார் நீ? எங்கே இருக்கே? என்ன வேணும் உனக்கு?” 

இவ்வளவு நேரமும் கொஞ்சிப் பேசிய குரல், அதிகபட்ச அதிகாரத்துடன்,

“Cancel the tender at any cost else your child will be lost”

இணைப்பு துண்டிக்கப்பட்டது.

No comments: